புதுக்கவிதைகள் போலவே ..... படித்தவுடன் புரியும் வண்ணம் எளிய தமிழில் வெண்பாக்களைத் தரமுடியும் எனக்காட்ட முற்படும் ஒர் 'அணிலின்' சிறு முயற்சி இது ....... பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள் .... கருத்துக்களைக் கூறி ஆதரவு தாருங்கள்.....
பாரதியின் பிறந்த நாளில் பிறக்கிறது இந்த இழை....
உயரத்தில் பறக்கவைக்கப்போவது நீங்கள் தான்
1. அக்கினிக் குஞ்சு :
வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியேபாராதி ருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..

0 comments:
Post a Comment